டெல்லியில் தமிழ்நாடு அரசு இல்லத்தை மாணவர்கள் முற்றுகையிட முயற்சி
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து, சென்னை வண்ணாரப்பேட்டையில் நேற்று முன்தினம் முஸ்லிம்கள் நடத்திய போராட்டத்தின் போது தடியடி நடந்தது. இதை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் நேற்று போராட்டங்கள் நடைபெற்றன.
புதுடெல்லி,
எதிரொலியாக டெல்லியிலும் ஜாமியா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி கவுடில்யா ரோட்டில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடுவதற்காக மாணவ-மாணவிகள் கோஷமிட்டபடி வந்தனர். இதுபற்றி ஏற்கனவே அறிந்திருந்த போலீசார், அருகில் உள்ள பீகார் பவன் பகுதியிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தையொட்டி, டெல்லியில் உள்ள பழைய மற்றும் புதிய தமிழ்நாடு அரசு இல்லங்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
எதிரொலியாக டெல்லியிலும் ஜாமியா ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நேற்று போராட்டம் நடத்தப்பட்டது. டெல்லி கவுடில்யா ரோட்டில் உள்ள பழைய தமிழ்நாடு இல்லத்தை முற்றுகையிடுவதற்காக மாணவ-மாணவிகள் கோஷமிட்டபடி வந்தனர். இதுபற்றி ஏற்கனவே அறிந்திருந்த போலீசார், அருகில் உள்ள பீகார் பவன் பகுதியிலேயே அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவத்தையொட்டி, டெல்லியில் உள்ள பழைய மற்றும் புதிய தமிழ்நாடு அரசு இல்லங்களில் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.
Related Tags :
Next Story