1947-ல் முஸ்லீம்கள் பாகிஸ்தான் அனுப்பப்பட்டிருக்க வேண்டும் ; மத்திய மந்திரி கிரிராஜ் சிங் சர்ச்சை பேச்சு
முஸ்லீம்களை 1947-ல் பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று மத்திய மந்திரி கிரிராஜ்சிங் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பாட்னா,
சர்ச்சை கருத்துக்களுக்கு பெயர் போனவர் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங். முஸ்லீம்களுக்கு எதிராக அடிக்கடி சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
அந்த வகையில், முஸ்லீம்களை 1947-லேயே பாகிஸ்தான் அனுப்பியிருக்க வேண்டும் என்று கூறி கிரிராஜ் சிங் கூறியுள்ளார்.
பீகாரின் புர்னியா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கிரிராஜ் சிங் கூறியதாவது ;- “1947 ஆம் ஆண்டுக்கு முன்பு முகம்மது அலி ஜின்னா இஸ்லாமிய நாட்டுக்காக அழுத்தம் கொடுத்தார். நமது முன்னோர்கள் செய்த மிகப்பரிய தவறு அது.
இதற்கான விலையை தற்போது நாம் கொடுத்து வருகிறோம். அந்த நேரத்தில், முஸ்லீம் சகோதரர்களை அங்கு(பாகிஸ்தான்) அனுப்பி விட்டு, நமது இந்துக்களை இங்கு கொண்டு வந்திருந்தால், இப்படியான ஒரு சூழலில் நாம் இருந்திருக்க மாட்டோம்” என்றார்.
நாடு முழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிரிராஜ் சிங்கின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story