டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்
டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுடெல்லி,
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட (சிஏஏ) ஆதரவாளர்களுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே நேற்று இரண்டாவது நாளாக ஏற்பட்ட மோதலில் வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில், ஒரு தலைமைக்காவலர் உள்பட 5 பேர் உயிரிழந்தனர். 60-க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். இதனால் இங்கு பதட்டம் நிலவுகிறது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க கூடுதல் போலீசார் அழைக்கப்பட்டுள்ளனர்.
இந்த போராட்டத்தில் வாலிபர் ஒருவர் வானத்தை நோக்கி கைத்துப்பாக்கியால் சுட்டார். மேலும், காவல் துறையினரையும், சிவப்பு நிற டி ஷர்ட் அணிந்த அந்த நபர் மிரட்டினார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் பரவியது.
இதையடுத்து, கைத்துப்பாக்கியுடன் வலம் வந்த அந்த நபர் யார் என போலீசார் தீவிரமாக விசாரித்து தேடி வந்தனர். இந்நிலையில் ஷாரூக் என்ற நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். 33 வயது கொண்ட தாடி வைத்து காணப்படும் இந்த நபருக்கு துப்பாக்கி எப்படி வந்தது ? இவருக்கு பயங்கரவாத அமைப்புகளிடம் தொடர்பு உண்டா என்ற கோணத்திலும் விசாரிக்கப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story