கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது-கெஜ்ரிவால்


கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது-கெஜ்ரிவால்
x
தினத்தந்தி 25 Feb 2020 8:14 AM GMT (Updated: 25 Feb 2020 8:23 AM GMT)

தேவைக்கேற்ப கூடுதல் போலீசார் பணியில் ஈடுபடுத்தபடுவார்கள் என உறுதியளிக்கப்பட்டுள்ளது என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

டெல்லி வன்முறை சம்பவம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில்   துணைநிலை ஆளுநர், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், காவல் ஆணையர் ஆகியோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது ; - “ வன்முறை நிறுத்தப்பட வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறோம்.  உள்துறை அமைச்சர் ஆலோசனைக்கு அழைப்பு விடுத்தார். இது நேர்மறையான ஒன்றாகும்.  டெல்லியில் அமைதி திரும்புவதை உறுதி செய்ய வேண்டும் என்று அனைத்து அரசியல் கட்சிகளும் முடிவெடுத்துள்ளோம்” என்றார். 

அரவிந்த் கெஜ்ரிவாலிடம் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர ராணுவம் கேட்கப்படுமா? என்று கேட்ட போது, “ தேவைப்பட்டால், நடக்கும் என நம்புகிறேன். ஆனால் தற்போது, காவல்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தேவைக்கேற்ப கூடுதல் காவல்துறையினர் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று எங்களுக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது” என்றார். 

Next Story