டெல்லி வன்முறை: உயிரிழந்தோர் எண்ணிக்கை 27 ஆக உயர்வு
டெல்லி வன்முறையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக மோதல்கள் நடைபெற்றன. இது வன்முறையாக மாறியது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வன்முறையில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் வீடு திரும்பி விட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் தலைநகர் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த சூழலில் டெல்லியில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மூன்று தினங்களாக மோதல்கள் நடைபெற்றன. இது வன்முறையாக மாறியது. இதனால் டெல்லியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் டெல்லி வன்முறையில் பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது 27 ஆக உயர்ந்துள்ளது. முன்னதாக வன்முறையில் 24 பேர் பலியானதாக தகவல் வெளியான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளதால் பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் ஜி.டி.பி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் சிலர் வீடு திரும்பி விட்டனர். வன்முறையை கட்டுப்படுத்த வடகிழக்கு டெல்லியில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story