கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்


கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
x
தினத்தந்தி 4 March 2020 8:15 AM GMT (Updated: 4 March 2020 8:26 AM GMT)

கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக நீடித்த  கேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.  உரிமம் பெறாத  ஆலைகளுக்கு உயர் நீதிமன்ற உத்தரவுப்படி  சீல் வைக்கும் பணிகளை அரசு  தொடங்கியதால் வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், குடிநீர் ஆலைகள் உரிமம் கோரி மீண்டும் விண்ணப்பிக்கலாம் எனவும், உரிமம் கோரி விண்ணப்பித்தால்  15 நாட்களுக்குள் தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. 

இதையடுத்து,   கடந்த 7 நாட்களாக நீடித்த வேலை நிறுத்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக கேன் குடிநீர் ஆலைகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேன் குடிநீர் ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டதால், சென்னை உள்பட தமிழகத்தில் கடந்த ஒருவாரமாக குடிநீர் கேன் தண்ணீருக்கு நிலவி வந்த தட்டுப்பாடு பிரச்சினை சரியாகும் எனத்தெரிகிறது. 

Next Story