மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு


மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரிப்பு
x
தினத்தந்தி 16 March 2020 7:45 AM GMT (Updated: 16 March 2020 8:14 AM GMT)

மராட்டியத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது.

மும்பை,

சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவி வரும் உயிர் கொல்லி கொரோனா வைரஸ் இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது. குறிப்பாக மராட்டிய மாநிலத்திலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று  வரை மராட்டியத்தில் 33 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

இந்த நிலையில், மராட்டியத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 4  பேரில் 3 பேர் மும்பையைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் நவி மும்பையைச்சேர்ந்தவர் எனவும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இதன் மூலம், மராட்டியத்தில் மட்டும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆக அதிகரித்துள்ளது. 

Next Story