பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது - ஜே.பி.நட்டா அறிவிப்பு


பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது - ஜே.பி.நட்டா அறிவிப்பு
x
தினத்தந்தி 18 March 2020 8:52 PM GMT (Updated: 18 March 2020 8:52 PM GMT)

பிரதமர் மோடியின் வேண்டுகோளை தொடர்ந்து, பா.ஜனதா சார்பில் ஒரு மாதம் போராட்டம் நடைபெறாது என்று ஜே.பி.நட்டா அறிவித்துள்ளார்.

புதுடெல்லி,

பா.ஜனதா எம்.பி.க்கள் கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு, கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதைத்தொடர்ந்து, பா.ஜனதா சார்பில் ஒரு மாதத்துக்கு கட்சி நிகழ்ச்சிகள் மற்றும் போராட்டங்கள் நடைபெறாது என தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அறிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “நாடாளுமன்ற கட்சி கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கூறியபடி, கொரோனா வைரஸ் குறித்து பொதுமக்களுக்கு பா.ஜனதாவினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், ஒரு மாதத்துக்கு பா.ஜனதா சார்பில் போராட்டங்கள், பேரணிகள் மற்றும் எந்தவிதமான நிகழ்ச்சிகளும் நடைபெறாது. கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், பொதுமக்கள் எதை செய்ய வேண்டும்? எதை செய்யக்கூடாது? என்பது பற்றி பா.ஜனதா கட்சியினர் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார்.

Next Story