இத்தாலியில் இருந்து 263 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினர்


இத்தாலியில் இருந்து 263 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினர்
x
தினத்தந்தி 22 March 2020 7:14 AM GMT (Updated: 22 March 2020 7:34 AM GMT)

கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இத்தாலியில் இருந்து 263 இந்தியர்கள் ஏர் இந்தியா விமானம் மூலம் நாடு திரும்பினர்

புதுடெல்லி,

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ரோம் நகரில் இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருகிறார்கள். அவர்களை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த தனி (787 டிரீம்லைனர்) விமானம் நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு ரோம் நகருக்கு சென்றது.

இந்த விமானம் அங்கு தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் மீட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லிக்கு திரும்பியது. விமானத்தில் வந்த 263 இந்தியர்களும்  தனிமைப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளனர். 

Next Story