டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சேவை ரத்து


டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சேவை ரத்து
x
தினத்தந்தி 23 March 2020 7:40 PM GMT (Updated: 23 March 2020 7:40 PM GMT)

டெல்லி ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

டெல்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ ஆஸ்பத்திரியில் புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காலவரையின்றி மூடப்பட்டது. டெல்லி எய்ம்ஸ் வரலாற்றிலேயே புறநோயாளிகள் சேவை மூடப்பட்டது, இதுவே முதல்முறை ஆகும்.

சிறப்பு மருத்துவம், புதிய, பழைய நோயாளிகள் பதிவு ஆகியவற்றையும், அனைத்து மையங்களையும் மறு உத்தரவு வரும்வரை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story