இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள்
இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறித்து அதிகம் பேரிடம் சோதனை நடத்திய மாநிலங்கள் கேரளாவும் , மாராட்டிய மாநிலங்களாகும்.
திருவனந்தபுரம்
இந்தியாவில் ஏற்பட்டு உள்ள கொரோனா வைரஸ் பாதிப்புகளில் கிட்டத்தட்ட 36 சதவீதம் கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் உள்ளது.
கேரளா மற்றும் மராட்டிய மாநிலங்களில் சமீபத்தில் ஒரு அதிவேக கொரோனா வைரஸ் பரவலை கண்டிருக்கின்றன. இந்த மாநிலங்கள் ஒப்பீட்டளவில் அதிக சோதனை விகிதங்களைக் கொண்டுள்ளன. இதில் கேரளா மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது. மராட்டிய மாநில புனே மாவட்டம் அதிக பாதிப்பு இல்லை என்று பதிவு செய்துள்ளது.
36 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் 23ந்தேதி குறைந்தது ஒரு பாதிப்பையாவது பதிவு செய்துள்ளன.சோதனை செய்யப்பட்ட மாதிரிகளுக்கான தரவு சில மாநிலங்களுக்கு மட்டுமே கிடைத்து உள்ளது. அவற்றில், கேரளா மிகப்பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது, மேற்கு வங்கம் குறைந்த எண்ணிக்கையிலான மாதிரிகளை சோதனை நடத்தி உள்ளது.
மத்திய சுகாதார அமைச்சகத்திடம் கிடைத்த சமீபத்திய ஆனால் மதிப்பிடப்படாத தரவுகளின்படி, 87 மாவட்டங்களில் குறைந்தது ஒரு பாதிப்பாவது பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாநிலங்கள் | சோதனை | தேதி | மக்கள் தொகையில் |
கேரளா | 4035 | மார்ச் 22 | 11.38 |
கர்நாடகா | 1387 | மார்ச் 22 | 2.08 |
மராட்டியம் | 1666 | மார்ச் 22 | 1.37 |
தமிழ்நாடு | 552 | மார்ச் 23 | 0.72 |
குஜராத் | 422 | மார்ச் 23 | 0.65 |
ஆந்திரா | 178 | மார்ச் 23 | 0.33 |
மேற்குவங்காளம் | 128 | மார்ச் 22 | 0.13 |
Related Tags :
Next Story