இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 649 ஆக உயர்வு
இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக உயர்ந்துள்ளது.
புதுடெல்லி,
சீனாவின் உகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், தற்போது அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளையும் உலுக்கி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே காணப்படுகிறது.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 649 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக மராட்டியத்தில் 124-பேருக்கும், கேரளாவில் 118-பேருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட 42 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். 13 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story