இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 724 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
பல்வேறு உலக நாடுகளைப்போல இந்தியாவிலும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் சுமார் 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏராளமான நோயாளிகளை உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 694-ல் இருந்து 724 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதேபோல், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் அதிகபட்சமாக கேரளாவில் 137 பேரும், மராட்டியத்தில் 130 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கையும் 43-ல் இருந்து 67 ஆக உயர்ந்துள்ளது.
Related Tags :
Next Story