இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு


இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு  கொரோனா  வைரஸ் பாதிப்பு
x
தினத்தந்தி 28 March 2020 4:41 AM GMT (Updated: 28 March 2020 4:43 AM GMT)

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 873 ஆக உயர்ந்துள்ளது.

புதுடெல்லி,

சீனாவில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் 873 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 149 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மராட்டியத்தில் 177 பேருக்கும், கேரளாவில் 165 பேருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை இந்தியாவில் 19 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில், 79 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணம் அடைந்து இருப்பதாகவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story