இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரிப்பு
இந்தியாவில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. இந்தியாவில், தற்போதைய நிலவரப்படி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 979 ஆக உயர்ந்துள்ளது. இந்தத் தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 86 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
Related Tags :
Next Story