அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இப்போதைக்கு, முழு ஊரடங்கை நீக்குவது சாத்தியமில்லை -பிரதமர் மோடி


அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு: இப்போதைக்கு, முழு ஊரடங்கை நீக்குவது சாத்தியமில்லை -பிரதமர் மோடி
x
தினத்தந்தி 8 April 2020 1:55 PM GMT (Updated: 8 April 2020 1:55 PM GMT)

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு : ஊரடங்கு நீடிக்கப்பட வாய்ப்பு உள்ளது விரைவில் பிரதமர் மோடி அறிவிப்பார்.

புதுடெல்லி

இந்தியாவில் கொரோனாவால் அறிவிக்கப்பட்டு உள்ள 21 நாள் ஊரடங்கால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான நெருக்கடி, அதிகரித்து வருகிறது. வேலையின்மை மற்றும் வணிகங்களின் மீதான பாதிப்பு ஆகியவை ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதார நாட்டின் சில பகுதிகளை மீண்டும் திறக்க மத்திய அரசின்  மீதான அழுத்தத்தை அதிகரித்துள்ளன. இந்தியாவவில் கொரோனா வைரஸ் பாதிப்புகளின் எண்ணிக்கை 5,194 ஆக உயர்ந்துள்ளது, 149 பேர் உயிர் இழந்து உள்ளனர்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்தும் கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகள் தொடர்பாகவும் பொருளாதார இழப்புகளை சரி செய்வது பற்றியும் பிரதமர் மோடி கடந்த சிலதினங்களாக பல்வேறு தரப்பினருடன் பேசி வருகிறார்.
 
கடந்த வாரம், பிரதமர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்  உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். முன்னாள் ஜனாதிபதிகள் பிரதிபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங் மற்றும் எச்.டி.தேவேகவுடா ஆகியோருடன் அவர் ஆலோசனை நடத்துனார்.நாட்டின் பிற பகுதிகளில் கட்டுப்பாடுகளை தளர்த்தும் போது கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களை மூடுவது குறித்தும்  விவாதத்தில் உள்ள திட்டங்களில் ஒன்றாகும்.

டிவி, பத்திரிகை ஆசிரியர்கள், ரேடியோ ஜாக்கிகளுடனும் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.இதனைத் தொடர்ந்து நாட்டின் முன்னணி சமூக மற்றும் மத அமைப்பினர், உலகம் முழுவதும் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளுடன் அவர் உரையாற்றினார்.

பல மாநில முதல்வர்களும், நிபுணர்களும் வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதையும் வரும் வாரங்களில் தொற்று அதிகரிக்கக்கூடும் என்ற எச்சரிக்கையையும் கருத்தில் கொண்டு ஏற்கனவே ஊரடங்கு நீட்டிப்பு கோரியுள்ளனர்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசியல் கட்சிகளின் நாடாளுமன்றக் குழுத் தலைவர்களுடன் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம்  இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த உரையாடலில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் 5 எம்.பி.க்களுக்கு மேல் உள்ள கட்சியின் குழுத் தலைவர்கள் பங்கேற்றனர்.

காங்கிரஸ் சார்பில் குலாம் நபி ஆசாத், திமுக சார்பில் டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் சுதீப் பண்டோபாத்யாய், சிவசேனா சார்பில் சஞ்சய் ரவுத், சமாஜ்வாதி சார்பில் ராம் கோபால் யாதவ், பகுஜன் சமாஜ் சார்பில் எஸ்.சி.மிஸ்ரா, லோக் ஜனசக்தி சார்பில் சிராக் பாஸ்வான், தேசியவாத காங்கிரஸ் சார்பில் சரத் பவார் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கொரோனா பரவாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஒத்துழைப்பு மற்றும் ஆலோசனைகளை பிரதமர் மோடி கோரியதாக தெரிகிறது. மேலும் ஊரடங்கு மற்றும் அதுதொடர்பாகவும், பொருளாதார இழப்புகளை சரி செய்வது பற்றியும் அவர்களுடன் பிரதமர் மோடி ஆலோசித்தார். தங்கள் கருத்துக்களை அவர்கள் எடுத்துரைத்தனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை  தடுக்கும் வகையில் அறிவிக்கபட்டு உள்ள ஊரடங்கு  நீட்டிக்கப்படும் என்றும், ஏப்ரல் 14 க்குப் பிறகு ஒரே நேரத்தில் கட்டுப்பாடுகள் நீக்கப்படாது என்றும் பிரதமர் நரேந்திர மோடி இன்று  பரிந்துரைத்தார்.

"வீடியோ கான்பரன்சிங்கில் பேசிய மோடி அரசாங்கத்தின் முன்னுரிமை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றுவதாகும். நாட்டின் நிலைமை ஒரு 'சமூக அவசரநிலைக்கு' ஒத்ததாக இருக்கிறது, இது கடுமையான முடிவுகளை அவசியமாக்கியுள்ளது, நாம் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டும். கொரோனாவுக்குப் பிறகு வாழ்க்கை மீண்டும் ஒரே மாதிரியாக இருக்காது, வரவிருக்கும் நேரங்களுக்கு "முன் கொரோனா மற்றும் பிந்தைய கொரோனா" இருக்கும்.

ஊரடங்கை நீக்க வேண்டும் என்று யாரும் சொல்லவில்லை. நான் மீண்டும் முதல்வர்களுடன் பேசுவேன். ஆனால் இப்போதைக்கு, முழு ஊரடங்கை நீக்குவது சாத்தியமில்லை என்பதே மனநிலை. நான்மாவட்ட மட்டத்திலும் பேசி உள்ளேன் . எங்களைப் பொறுத்தவரை, எங்கள் மக்களைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி ஊரடங்கு தான்.

முழு உலகமும் நெருக்கடியில் உள்ளது.  செல்வந்தர்களும் மிக நவீன அமைப்புகளும் கூட இந்த கொடிய வைரஸுக்கு முன் விழுந்துவிட்டன. தனியாகப் போராடக்கூடிய எந்த நாடும் இல்லை, அதுவும் ஒரு காரணம், நாட்டின் வளங்கள் மீது பெரும் அழுத்தம் உள்ளது. ”

நாம் விரைவான முடிவுகளை எடுக்க முயற்சிக்கிறோம், இன்று இந்த வைரஸ் பரவுவது இன்னும் கட்டுப்பாட்டில் உள்ள உலகின் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு நாளும், சூழ்நிலைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன என்பதையும் நாம் மனதில் கொள்ள வேண்டும். எனவே, அனைத்து நாடுகளும் சமூக விலகல் மற்றும் ஊரடங்கில் கவனம் செலுத்துகின்றன. கொரோனாவை சமாளிக்க இரண்டு வழிகள் இவைதான்
என்று மோடி கூறினார்

பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் மத மையங்கள் இன்னும் பல வாரங்கள் மூடப்பட வேண்டும் என்று அமைச்சர்கள் குழு நேற்று பரிந்துரைத்தது.

ரயில் பயணம், பேருந்துகள், பெருநகரங்கள் மற்றும் மதக் கூட்டங்கள் நாட்டில் எங்கும் அனுமதிக்கப்படுவது சாத்தியமில்லை.

ஊரடங்கை நீட்டிக்கலாமா என்பது குறித்து பிரதமர் மோடி இந்த வாரம் ஒரு முடிவை எடுக்க உள்ளார். அதற்கு முன், அவர் சனிக்கிழமை 11-ந்தேதி வீடியோ கான்பரன்சிங் மூலம் மாநிலமுதல்வர்களுடன் இரண்டாவது சந்திப்பை நடத்துவார் . அப்போது இது ஊரடங்கை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என கூறப்படுகிறது.


Next Story