தென்மேற்கு பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவு இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு


தென்மேற்கு பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவு இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
x
தினத்தந்தி 15 April 2020 11:56 AM GMT (Updated: 15 April 2020 11:56 AM GMT)

தென்மேற்கு பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம்,  நிகழாண்டு  நாடு முழுவதும் மழை இயல்பான அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது.   இயல்பான அளவுக்கு மழை இருக்கும் என்ற தகவலால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story