தென்மேற்கு பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவு இருக்கும்: வானிலை ஆய்வு மையம் கணிப்பு
தென்மேற்கு பருவ மழை நிகழாண்டு இயல்பான அளவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் நீர் ஆதாரத்தைப் பூர்த்தி செய்யும் தென்மேற்குப் பருவமழை இந்த ஆண்டு ஜூன் 1-ம் தேதி கேரளாவில் தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஜூன் 4-ம் தேதி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், நிகழாண்டு நாடு முழுவதும் மழை இயல்பான அளவில் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. இயல்பான அளவுக்கு மழை இருக்கும் என்ற தகவலால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story