டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு


டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது - அரவிந்த் கெஜ்ரிவால் அறிவிப்பு
x
தினத்தந்தி 19 April 2020 11:03 PM GMT (Updated: 19 April 2020 11:03 PM GMT)

டெல்லியில் ஊரடங்கு தளர்வு கிடையாது என்று அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

புதுடெல்லி, 

சில ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று தளர்த்தப்படும் நிலையில், டெல்லியில் எந்த தளர்வும் கிடையாது என்று அந்த மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாட்டின் மக்கள் தொகையில் 2 சதவீதம் பேர் தான் டெல்லியில் வசிக்கின்றனர். ஆனால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 12 சதவீதம், டெல்லியில் ஏற்பட்டுள்ளது. எனவே, இப்போதைக்கு ஊரடங்கில் எந்த தளர்வும் கிடையாது. வருகிற 27-ந் தேதி நடக்கும் ஆய்வுக்கூட்டத்தின்போது, அப்போதுள்ள நிலவரத்தை பொறுத்து முடிவு எடுப்போம். 

ஊரடங்கால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்களை நான் அறிவேன். அதே சமயத்தில், மக்களின் உடல்நலனை கருத்திற்கொண்டு, கட்டுப்பாடுகளை தளர்த்துவது இல்லை என்று முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story