ஆந்திராவில் புதிதாக 80 பேருக்கு கொரோனா - வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 893ஆக உயர்வு
ஆந்திராவில் இன்று புதிதாக 80 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அமராவதி,
உலக நாடுகளை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் நாளுக்கு நாள் பாதிப்பை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பரவல் வேகம் குறைந்தபாடில்லை.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி 21393 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில் இன்று புதிதாக 80 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம், கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை 893 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்று மட்டும் 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஆந்திராவில் இதுவரை கொரோனாவுக்கு 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story