கொரோனா அச்சுறுத்தல்; டெல்லியில் உள்ள நிதி ஆயோக் கட்டிடத்திற்கு சீல் வைப்பு


கொரோனா அச்சுறுத்தல்; டெல்லியில் உள்ள நிதி ஆயோக் கட்டிடத்திற்கு சீல் வைப்பு
x
தினத்தந்தி 28 April 2020 9:18 AM GMT (Updated: 28 April 2020 9:18 AM GMT)

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் உள்ள நிதி ஆயோக் கட்டிடத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை.  இந்தியாவில்   கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 30 ஆயிரத்தை நெருங்கிவிட்டது. 

இந்த நிலையில், தேசிய வளர்ச்சிக் கொள்கைகள் குறித்து அரசுக்கு பரிந்துரை செய்யும் அமைப்பான நிதி ஆயோக் அமைப்பின் ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நிதி ஆயோக் அலுவலகம் அமைந்துள்ள கட்டிடம் சீல் வைக்கப்பட்டுள்ளது. கிருமி நாசினி தெளித்து கட்டிடத்தை தூய்மை செய்யும் பணியில் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.  

 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இரு ஊழியர்களும் இயக்குநர் மட்டத்திலான அலுவலர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று  சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Next Story