மூன்றாவது நாளாக தொடர் விறுவிறுப்பு - சென்செக்ஸ் 606 புள்ளிகள் ஏற்றம்


மூன்றாவது நாளாக தொடர் விறுவிறுப்பு - சென்செக்ஸ் 606 புள்ளிகள் ஏற்றம்
x
தினத்தந்தி 29 April 2020 11:49 PM GMT (Updated: 29 April 2020 11:49 PM GMT)

புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் தொடர்ந்து மூன்றாவது நாளாக விறுவிறுப்பாக இருந்தது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 606 புள்ளிகள் ஏற்றம் கண்டது.

மும்பை,

பங்கு வர்த்தகம் முன்னேறிய நிலையில், மும்பை பங்குச்சந்தையில் உலோக துறை குறியீட்டு எண் அதிகபட்சமாக 3.92 சதவீதம் முன்னேறியது. அடுத்து நிதிச்சேவை துறை குறியீட்டு எண் 3.19 சதவீதம் ஏற்றம் கண்டது. சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவனப் பங்குகளில் 23 பங்குகளின் விலை உயர்ந்தது. 7 பங்குகளின் விலை சரிந்தது.

இந்தப் பட்டியலில் எச்.டீ.எப்.சி., எச்.டீ.எப்.சி. வங்கி. எச்.சி.எல். டெக்னாலஜிஸ், மகிந்திரா அண்டு மகிந்திரா, டாட்டா ஸ்டீல், பாரத ஸ்டேட் வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஜாஜ் பைனான்ஸ், இன்போசிஸ், டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் உள்ளிட்ட 23 பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. அதே சமயம் ஆக்சிஸ் வங்கி, ஏஷியன் பெயிண்ட், இந்துஸ்தான் யூனிலீவர், டைட்டான் கம்பெனி உள்பட 7 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் சென்செக்ஸ் 605.64 புள்ளிகள் அதிகரித்து 32,720.16 புள்ளிகளில் நிலைகொண்டது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 32,897.59 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 32,171.65 புள்ளிகளுக்கும் சென்றது.

இந்தச் சந்தையில் 1,400 நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்தும், 964 நிறுவனப் பங்குகளின் விலை சரிந்தும் இருந்தது. 185 நிறுவனப் பங்குகளின் விலையில் மாற்றம் இல்லை. நேற்று மொத்த வர்த்தகம் ரூ.2,206 கோடியாக குறைந்தது. கடந்த செவ்வாய்க்கிழமை அன்று அது ரூ.2,248 கோடியாக இருந்தது.

தேசிய பங்குச்சந்தையில், வர்த்தகத்தின் இறுதியில் நிப்டி 172.45 புள்ளிகள் உயர்ந்து 9,553.35 புள்ளிகளில் முடிவுற்றது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக 9,599.85 புள்ளிகளுக்கும், குறைந்தபட்சமாக 9,392.35 புள்ளிகளுக்கும் சென்றது.

Next Story