ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 3 பேர் பலி


ஜம்மு காஷ்மீர்: பயங்கரவாதிகள் தாக்குதலில் துணை ராணுவ வீரர்கள் 3 பேர் பலி
x
தினத்தந்தி 4 May 2020 3:40 PM GMT (Updated: 4 May 2020 3:40 PM GMT)

காஷ்மீரில் துணை ராணுவம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 3 வீரர்கள் உயிரிழந்தனர்.

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஹந்த்வாரா மாவட்டத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பயங்கரவாதிகள் அவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் மூன்று வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அதேவேளையில் பயங்கரவாதி ஒருவரும் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

சம்பவ இடத்திற்கு கூடுதல் வீரர்களை வரவழைக்கப்பட்டு பயங்கரவாதிகளை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. நேற்று இதே மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் கர்னல் உள்பட ஐந்து  வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது நினைவுகூரத்தக்கது.


Next Story