கேரளாவில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று - பினராயி விஜயன்
கேரளத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
திருவனந்தபுரம்,
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மேலும், தவறுதலாக புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தெலுங்கானாவுக்கு பதிலாக கேரளம் வரும் ரெயிலில் வந்த நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து வந்த 48 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கேரளத்தில் 526 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1.58 லட்சத்தை தாண்டியது. பலி எண்ணிக்கை 4,531 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 6,566 பேருக்கு கொரோனா உறுதிபடுத்தப்பட்ட நிலையில், 194 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளத்தில் இன்று 84 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
மேலும், தவறுதலாக புலம்பெயர் தொழிலாளர் ஒருவர் தெலுங்கானாவுக்கு பதிலாக கேரளம் வரும் ரெயிலில் வந்த நிலையில், அவர் மரணம் அடைந்துவிட்டதாகவும் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
வெளிமாநிலங்களில் இருந்து வந்த 48 பயணிகளுக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்த 31 பயணிகளுக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தற்போது கேரளத்தில் 526 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்று முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story