மேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று
மேற்குவங்க மாநில மந்திரிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
கொல்கத்தா,
மேற்குவங்காள மாநில தீணைப்புத்துறை மந்திரி சுஜித் போஸ் வீட்டில் வேலை செய்பவருக்கு கொரோனா தொற்று இருப்பது சமீபத்தில் உறுதியானது. இதைத்தொடர்ந்து மந்திரி மற்றும் அவருடைய குடும்பத்தினர் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் மந்திரி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மந்திரி சுஜித் போஸ் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளார். மம்தா பானர்ஜி தலைமையிலான மாநில அமைச்சரவையில் ஏற்பட்ட முதல் பாதிப்பு இதுவாகும்.
Related Tags :
Next Story