மராட்டியத்தில் கொரோனாவுக்கு இதுவரை 54 போலீசார் பலி
மராட்டிய மாநிலத்தில் மின்னல் வேகத்தில் கொரோனா பரவி வருகிறது.
மும்பை,
மராட்டிய போலீஸ் படையில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட போலீசார் பணிபுரிந்து வருகிறார்கள். மாநிலத்தை புரட்டி எடுத்து வரும் கொரோனா வைரசால், அந்த நோய் பரவலை தடுக்க களத்தில் நின்று போராடும் போலீசாரும் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இதுவரை மாநிலத்தில் 4 ஆயிரத்து 200 போலீசார் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வீடு திரும்பினர். 51 போலீசார் ஏற்கனவே கொரோனாவுக்கு பலியானார்கள். இவர்களில் 34 பேர் மும்பையை சேர்ந்தவர்கள்.
இந்தநிலையில், ஒரு போலீஸ் அதிகாரி உள்பட மேலும் 3 போலீசார் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மராட்டியத்தில் கொரோனாவால் உயிரிழந்த போலீசாரின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
Related Tags :
Next Story