கர்நாடகாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கர்நாடகாவில் இதுவரை இல்லாத புதிய உச்சம்: இன்று ஒரேநாளில் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 27 Jun 2020 3:33 PM GMT (Updated: 27 Jun 2020 3:33 PM GMT)

கர்நாடகாவில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று ஒரேநாளில் 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

இந்தியாவிலும் கொரோனா வைரஸ் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது. 

கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவல் முதலில் குறைவாகவே இருந்தது. ஆனால் கடந்த சில நாட்களாக கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கையும், வைரஸ் தொற்றால் பலியாவோரின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், இன்று ஒரேநாளில் புதிதாக 918 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 11,923 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரேநாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 371 பேர் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்னிக்கை 7,287 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 4441 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

Next Story