தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று
தாராவியில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தாராவி,
ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நுழைந்த கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.
நேற்றுவரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,232 ஆக இருந்தது.
இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 13 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 245 ஆக அதிகரித்து உள்ளது. இதுவரை 81 பேர் உயிரிழந்துள்ளனர்.
Related Tags :
Next Story