மணிப்பூரில் ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு


மணிப்பூரில் ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 28 Jun 2020 4:32 PM GMT (Updated: 28 Jun 2020 4:32 PM GMT)

மணிப்பூரில் வருகிற ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

உக்ரூல்,

மணிப்பூரில் 1,092 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.  இவர்களில் 432 பேர் குணமடைந்து சென்றுள்ளனர்.  660 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இந்நிலையில், மணிப்பூர் முதல் மந்திரி பைரன் சிங், வருகிற ஜூலை 15ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது என இன்று அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  அவர் கூறும்பொழுது, வரும் ஜூலை 1ந்தேதியில் இருந்து 15ந்தேதி வரை அடுத்த 15 நாட்களுக்கு மணிப்பூரில் ஊரடங்கை நீட்டிப்பது என முடிவு செய்துள்ளோம் என கூறியுள்ளார்.

இதேபோன்று, அசாமில் கவுகாத்தி நகரில் இன்று இரவு 7 மணிமுதல் அடுத்த 14 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

Next Story