காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை


காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
x
தினத்தந்தி 29 Jun 2020 2:40 AM GMT (Updated: 29 Jun 2020 2:40 AM GMT)

காஷ்மீரில் பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

ஸ்ரீநகர்

காஷ்மீர் மாநிலத்தின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ள குல்சோகர் என்ற இடத்தில் செவா உல்லர் கிராமத்தில்  சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக  பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. 

இதையடுத்து இன்று அதிகாலை அந்த பகுதியை பாதுகாப்புப் படையினர் சுற்றி வளைத்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 3 பயங்கரவாதிகள், பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தினர்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதிலடித் தாக்குதலில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும் தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனரா என பாதுகாப்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக ஜூன் 26 அன்று, டிராலில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.


Next Story