தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 3 July 2020 3:36 PM GMT (Updated: 3 July 2020 3:36 PM GMT)

தாராவியில் இன்று ஒரேநாளில் புதிதாக 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தாராவி,

ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதியான மும்பை தாராவியில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நுழைந்த கொரோனா வைரஸ் பரவல் காட்டுத்தீயாக பரவியது. இதையடுத்து பரவி வந்த கொரோனா வைரஸ் தற்போது கடந்த சில நாட்களாக அதிரடியாக குறைந்து வருகிறது.


நேற்றுவரை தாராவியில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,301ஆக இருந்தது.

இந்நிலையில், இன்று தாராவியில் புதிதாக 8பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 ஆயிரத்து 309 ஆக அதிகரித்து உள்ளது. 

இதுவரை 54 பேர் உயிரிழந்துள்ளனர். தாராவியில் இதுவரை 551 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Next Story