ஆந்திராவில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு


ஆந்திராவில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு
x
தினத்தந்தி 4 July 2020 12:01 PM GMT (Updated: 4 July 2020 12:01 PM GMT)

ஆந்திர மாநிலத்தில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அமராவதி,

ஆந்திராவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் பலி எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநிலத்தில் பல்வேறு முயற்சிகளை அம்மாநில அரசு எடுத்து வருகிறது. 

இந்நிலையில் ஆந்திராவில் இன்று மேலும் 765 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்மூலம் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,699 ஆக அதிகரித்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்ட 765 பேரில், வெளி மாநிலத்தைச் சேர்ந்த 32 பேருக்கும், வெளி நாடுகளிலிருந்து வந்த 6 பேருக்கும் தொற்று உறுதியாகி உள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு இன்று புதிதாக 12 பேர் உயிரிழந்துள்ளதால், பலி எண்ணிக்கை 218 ஆக அதிகரித்துள்ளது. 

ஆந்திராவில் கொரோனா தொற்றுக்கு தற்போது வரை 9,473 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர். இதுவரை மாநிலத்தில் 8,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Next Story