சச்சின் பைலட் பதவி- கட்சியில் இருந்து நீக்கம்: காங்கிரஸ் எம்.பி.சசி தரூர் வேதனை
சச்சின் பைலட் கட்சியில் சிறந்தவராகவும் மற்றும் பிரகாசமானவராகவும் இருந்தார் என காங்கிரஸ் எம்.பி சசி தரூர் வேதனை தெரிவித்து உள்ளார்.
திருவனந்தபுரம்
ராஜஸ்தான் மாநில துணை முதல்வரும், காங்கிரஸ் கமிட்டி தலைவருமான சச்சின் பைலட் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு,
காங்கிரஸ் கட்சியின் எம்பி சசி தரூர் அவரை கட்சியில் "சிறந்த மற்றும் பிரகாசமானவர்" என்று புகழ்ந்துள்ளார். மேலும், அவர் கட்சியை விட்டு வெளியேறுவதைப் பார்க்கும்போது வருத்தமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் சசி தரூர் தனது டுவிட்டர் பதிவில் கூறி உள்ளதாவது:-
சச்சின் பைலட் காங்கிரசில் இருந்து விலகுவதை கண்டு வருத்தமடைகிறேன். அவரை கட்சியில் சிறந்த நபர்களில் ஒருவராகவும், எதிர்காலமாகவும் நினைத்திருந்தேன், ஆனால் இப்படி நடக்கும் என எதிர்பார்க்கவில்லை. அவர் கட்சியிலிருந்து விலகுவதை விட, இணைந்து செயல்பட்டு கட்சியை மேலும் திறம்பட செயல்படுத்தி முன்னேற்றம் காணலாம், எங்கள் கனவுகளையும் நிறைவேற்றலாம்" என தெரிவித்துள்ளார்.
I am sad to see @SachinPilot leave @INCIndia. I consider him one of our best & brightest, and wish it had not come to this. Instead of parting, he should have joined the effort to make the Party a better& more effective instrument for his, and our, dreams.
— Shashi Tharoor (@ShashiTharoor) July 14, 2020
Related Tags :
Next Story