கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


கொரோனாவின் கோரப்பிடியில் மராட்டியம்: இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 15 July 2020 6:04 PM GMT (Updated: 15 July 2020 6:04 PM GMT)

மராட்டியத்தில் இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

கொரோனா வைரசின் கோரப்பிடியில்  மராட்டிய மாநிலம் சிக்கி தவித்து வருகிறது. நாட்டிலேயே கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள  மாநிலங்கள் பட்டியலில் மராட்டியம் தான் முதலிடம் வகிக்கிறது.  

இந்நிலையில் மராட்டியத்தில் இதுவரை இல்லாத புதிய உச்சமாக இன்று மேலும் 7,975 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 233 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 3,606 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,52,613 ஆக உயர்ந்துள்ளது.

மராட்டியத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,75,640 ஆக உள்ளது.  கொரோனா பாதிப்பால் மராட்டியத்தில் இதுவரை 10,928 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுடன் 1,11,801 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவல்களை மராட்டிய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

Next Story