எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்


எனது எச்சரிக்கையை கேட்க மறுக்கிறார்கள் ; மத்திய அரசு மீது ராகுல் காந்தி பாய்ச்சல்
x
தினத்தந்தி 24 July 2020 9:46 AM GMT (Updated: 24 July 2020 9:46 AM GMT)

கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று மத்திய அரசை ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

புதுடெல்லி,

சீனாவுடனான லடாக் எல்லை பிரச்சினையில் மத்திய அரசின் அணுகுமுறையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. தொடர்ந்து குறை கூறி வருகிறார். இது தொடர்பாக அவர் ஏற்கனவே 2 வீடியோக்களை வெளியிட்டார். அதில், பிரதமர் மோடி மீது அவர் கூறிய குற்றச்சாட்டுகளுக்கு பாரதீய ஜனதா தலைவர்கள் பதிலடி கொடுத்தனர்.

ராகுல் காந்தி தொடர்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் மத்திய அரசை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வருகிறார். ராகுல் காந்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:- கொரோனா குறித்தும், இந்திய பொருளாதாரம் குறித்தும் நான் தொடர்ந்து எச்சரித்து வந்தேன்; ஆனால் அவர்கள் கேட்கவில்லை , பேரழிவு ஏற்பட்டது.  தற்போது சீனா குறித்தும் எச்சரித்து வருகிறேன்;  இதையும் அவர்கள் கேட்க மறுக்கிறார்கள்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story