கர்நாடகா; கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 110 பேர் பலி
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு,
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோன தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 110 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றால் 85,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,724 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 52,791 ஆக உள்ளது. பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,267 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அங்கு 41ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நகரில் இதுவரை 833 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த சில வாரங்களாக கொரோன தொற்று பரவல் வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 5,007-பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 110 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவில் இதுவரை கொரோனா தொற்றால் 85,870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,724 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 52,791 ஆக உள்ளது. பெங்களூருவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 2,267 பேர் கொரோனாவால் பாதிப்பு அடைந்தனர். அங்கு 41ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. நகரில் இதுவரை 833 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.
இதுவரை மொத்தம் 11லட்சம் கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இந்த தகவல்களை கர்நாடக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story