மே.வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு: சாலைகள் வெறிச்சோடின
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மேற்கு வங்காளத்தில் இன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது.
கொல்கத்தா,
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, சனிக்கிழமையான இன்று மேற்கு வங்காளம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், வாகனங்கள் போக்குவரத்து எதுவும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற காரணங்களால் வெளியே வந்தவர்களை போலீசார் செல்ல அனுமதிக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் அடுத்த ஊரடங்கு வரும் 29 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,3973-ஆக உள்ளது.
மேற்கு வங்காளத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் வாரத்தில் இரண்டு நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்த அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
அதன்படி, சனிக்கிழமையான இன்று மேற்கு வங்காளம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், வாகனங்கள் போக்குவரத்து எதுவும் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. அத்தியாவசிய தேவைகளை தவிர்த்து பிற காரணங்களால் வெளியே வந்தவர்களை போலீசார் செல்ல அனுமதிக்கவில்லை. மேற்கு வங்காளத்தில் அடுத்த ஊரடங்கு வரும் 29 ஆம் தேதி கடைபிடிக்கப்பட உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்ட தகவலின் படி, மேற்கு வங்காளத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 5,3973-ஆக உள்ளது.
Related Tags :
Next Story