கொரோனா தொற்று: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மருத்துவமனையில் அனுமதி


கொரோனா தொற்று: மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 25 July 2020 10:33 AM GMT (Updated: 25 July 2020 10:33 AM GMT)

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

போபால்,

மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 61-வயதான சிவராஜ் சிங் சவுகானுக்கு  கொரொனா தொற்று அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து, அவர் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். 

பரிசோதனை முடிவுகளில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து,  கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டங்களை காணொலி மூலமாக நடத்த உள்ளதாகவும்,கொரோனா உறுதியான நிலையில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டதாக சிவராஜ் சிங் சவுகான் டுவிட்டரில் தெரிவித்து இருந்தார்.

சிறிது நேரத்தில் வெளியிட்ட மற்றொரு டுவிட் பதிவில், “மருத்துவர்கள் ஆலோசனைப்படி  தான் போபாலில் உள்ள சிராயூ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிவராஜ் சிங்  சவுகான் தெரிவித்துள்ளார்.  

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சிவராஜ் சிங் சவுகான், விரைவில் குணமடைய வாழ்த்துவதாக திக் விஜய் சிங், கமல்நாத் ஆகிய காங்கிரஸ் தலைவர்கள் தங்கள் டுவிட்டரில் பதிவிட்டுள்ளனர்.


Next Story