பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிப்பு


பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு  ஊரடங்கு நீட்டிப்பு
x
தினத்தந்தி 29 July 2020 9:23 AM GMT (Updated: 29 July 2020 10:04 AM GMT)

பீகாரில் மேலும் 16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

பாட்னா,

கொரோனா தொற்று பரவல் இன்னும் கட்டுக்குள் வராததால் பீகாரில் மேலும்  16 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அமல்படுத்தியுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வர உள்ள நிலையில்,  ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 16 நாட்களுக்கு ஊரடங்கை நீட்டிப்பதாக பீகார் அரசு அறிவித்துள்ளது.

கடந்த 3 வாரங்களாக மாநிலத்தில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ள பீகார் மாநில அரசு, ஊரடங்கு சமயத்தில் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. 

மேலும்,  அரசு,  அரசு பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவித பணியாளர்களுடன் இயங்கலாம் என்றும்  மத வழிபாட்டு தலங்கள் திறக்க விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் எனவும் பீகார் அரசு அறிவித்துள்ளது.


Next Story