576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? ராகுல் காந்தி கேள்வி


576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?  ராகுல் காந்தி கேள்வி
x
தினத்தந்தி 29 July 2020 4:22 PM GMT (Updated: 29 July 2020 4:22 PM GMT)

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்? என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

புதுடெல்லி,

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் விமானங்களில், முதல் கட்டமாக 5 விமானங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு வாழ்த்து தெரிவித்துள்ள ராகுல் காந்தி, மத்திய அரசையும் சாடியுள்ளார். தனது டுவிட்டரில் ராகுல் காந்தி எழுப்பியுள்ள கேள்விகள் பின்வருமாறு:

576 கோடி ரூபாய் மதிப்புள்ள ரஃபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?
126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்?

இந்துஸ்தான் ஏரோனெட்டிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப்போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க முடியுமா? என்று வினவியுள்ளார்.


Next Story