கொரோனாவுக்கு மணிப்பூரில் முதல் பலி


கொரோனாவுக்கு மணிப்பூரில் முதல் பலி
x
தினத்தந்தி 29 July 2020 11:28 PM GMT (Updated: 29 July 2020 11:28 PM GMT)

கொரோனாவுக்கு மணிப்பூரில் ஒருவர் முதல் பலியானார்.

இம்பால், 

இந்தியாவில் லட்சத்தீவை தவிர, பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கொரோனா பலரையும் பாதிப்புக்கு உள்ளாக்கி இருக்கிறது. இந்த வைரசின் பிடியில் சிக்கி மிசோரம் மற்றும் மணிப்பூரை தவிர பிற அனைத்து மாநிலங்களிலும் கொரோனா உயிர்ப்பலி வாங்கி இருந்தது. இந்த நிலையில் மணிப்பூரிலும் நேற்று ஒருவரின் உயிரை கொரோனா பறித்துள்ளது.

அங்குள்ள தாபோல் மாவட்டம் கோஞ்சியோம் பகுதியை சேர்ந்த 56 வயதான நபருக்கு கடந்த 26-ந் தேதி கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து, ரிம்ஸ் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுவே மணிப்பூரின் கொரோனாவால் ஏற்பட்ட முதல் பலி ஆகும். அவருக்கு சிறுநீரக கோளாறும், ரத்த அழுத்த பிரச்சினையும் இருந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மணிப்பூரில் எந்தவித பயண தொடர்பும் இன்றி பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதால், கடந்த 23-ந் தேதி முதல் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 2,317 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 1,615 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்ட நிலையில், மீதமுள்ளவர்கள் ஆஸ்பத்திரி மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story