கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி


கேரளாவில் மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி
x
தினத்தந்தி 31 July 2020 2:05 PM GMT (Updated: 31 July 2020 2:05 PM GMT)

கேரளாவில் இன்று மேலும் 1,310 பேருக்குக் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்,

கேரள சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 1,310 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 23,607 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் தொற்றுக்கு இதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 

இன்று வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்களில் 48 பேர் வெளிநாடுகளில் இருந்தும், 54 பேர் வெளி மாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும் உறுதியாகி உள்ளது. கொரோனா தொற்றில் இருந்து இன்று 864 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளநிலையில், இதுவரை 13,027 நோயாளிகள் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 10,495 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 22,279 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. தற்போது வரை, மொத்தம் 7,76,268 மாதிரிகள் சோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன,

தற்போது மாநிலம் முழுவதும் 1,43,323 பேர், வீடு அல்லது முகாம்களில் தனிமைப்படுத்தலில் 1,33,151 பேர் மற்றும் மருத்துவமனைகளில் 10,172 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 1,292 பேர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Next Story