தெலுங்கானாவில் மேலும் 2,083-பேருக்கு கொரோனா தொற்று


தெலுங்கானாவில் மேலும் 2,083-பேருக்கு கொரோனா தொற்று
x
தினத்தந்தி 1 Aug 2020 6:40 AM GMT (Updated: 1 Aug 2020 6:40 AM GMT)

தெலுங்கானாவில் மேலும் 2083 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐதராபாத்,

தெலுங்கானாவில் இன்று புதிதாக 2,083 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை கூறியதாவது:-

தெலுங்கானாவில் இன்று  புதிதாக 2,083 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு மொத்த பாதிப்பு 64,786 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு மொத்த பலி எண்ணிக்கை 530 ஆக உயர்ந்துள்ளது.

இன்று ஒரே நாளில் தொற்றில் இருந்து 1,114 பேர் மீண்டுள்ளனர். இதுவரை மீண்டவர்களின் எண்ணிக்கை 46,502 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஐதராபாத் நகரில்  578 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story