கொரோனா அறிகுறிகளை மறைக்காதீர்; அறிவுரை கூறிய ஆந்திர முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி


கொரோனா அறிகுறிகளை மறைக்காதீர்; அறிவுரை கூறிய ஆந்திர முன்னாள் மந்திரி கொரோனாவுக்கு பலி
x
தினத்தந்தி 1 Aug 2020 6:22 PM GMT (Updated: 1 Aug 2020 6:22 PM GMT)

ஆந்திர பிரதேச முன்னாள் மந்திரி மாணிக்கயாள ராவ் கொரோனா பாதிப்புக்கு இன்று பலியாகி உள்ளார்.

ஐதராபாத்,

ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014 மற்றும் 2018ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் முதல் மந்திரியாக இருந்த சந்திரபாபு நாயுடு தலைமையிலான அமைச்சரவையில் மந்திரியாக இருந்தவர் மாணிக்கயாள ராவ் (வயது 59).  பா.ஜ.க.வின் மூத்த தலைவரான இவருக்கு கடந்த ஜூலை முதல் வாரத்தில் கொரோனா பாதிப்பு அறியப்பட்டது.

இதனால் எலூரு நகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.  கார் பயணத்தில் கொரோனா பாதிப்பு உடைய நண்பர் ஒருவரிடம் இருந்து தனக்கு பாதிப்பு வந்தது என வீடியோ ஒன்றில் கூறிய அவர், கொரோனாவுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அதனை மறைக்காதீர்கள்.  நமது தவறான நடவடிக்கையால் வரும் வியாதி அல்ல அது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.

ஏறக்குறைய ஒரு மாதம் வரை சிகிச்சை பெற்று வந்த அவர் தீவிர சுவாச பாதிப்பிற்கு ஆளானார்.  இதனால் அவர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.  இந்நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து உள்ளார்.

அவரது இறுதி சடங்குகளை அரசு மரியாதையுடன், கொரோனா பாதித்தோருக்கான விதிகளுடன் மேற்கொள்ள முதல் மந்திரி ஜெகன் மோகன் உத்தரவிட்டு உள்ளார்.  இதன்படி அவரது இறுதி சடங்கு நாளை நடைபெறுகிறது.

Next Story