கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் பலி; 1,169 பேருக்கு பாதிப்பு
கேரளாவில் கொரோனாவுக்கு ஒருவர் இன்று பலியாகி உள்ளதுடன் 1,169 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
திருவனந்தபுரம்,
நாட்டில் கொரோனா பாதிப்புக்கு மராட்டியம், தமிழகம் உள்ளிட்டவை அதிகம் இலக்காகி உள்ளன. லட்சத்திற்கும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், தமிழகத்தின் அண்டை மாநிலம் ஆன கேரளாவில் பாதிப்பு எண்ணிக்கை மிக குறைந்த அளவிலேயே உள்ளது.
இந்த நிலையில், முதல் மந்திரி அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கொரோனாவுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 1,169 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 11,342 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 14,467 பேர் குணமடைந்து, மருத்துவமனையில் இருந்து சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர் என தெரிவித்து உள்ளது.
இதேபோன்று கேரள சுகாதார மந்திரி சைலஜா இன்று கூறும்பொழுது, கேரளாவில் கொரோனா பாதிப்புக்கு ஒருவர் பலியாகி உள்ளார். இதனால் பலி எண்ணிக்கை 82 ஆக உயர்ந்து உள்ளது என கூறியுள்ளார்.
Related Tags :
Next Story