கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் பணியாற்றிய ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா


Photo Credit: PTI
x
Photo Credit: PTI
தினத்தந்தி 3 Aug 2020 8:19 AM GMT (Updated: 3 Aug 2020 8:19 AM GMT)

கர்நாடக முதல்வர் எடியூரப்பா அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பெங்களூரு,

கர்நாடக முதல்வர் எடியூரப்பாவுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மருத்துவமனையில் எடியூரப்பா அனுமதிக்கப்பட்டுள்ளார்.  தனது உடல் நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் பரிந்துரைப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எடியூரப்பா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.

எடியூரப்பா மகள் பத்மாவதிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கர்நாடக முதல்வர் அலுவலகத்தில் பணியாற்றிய 6 ஊழியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆறு பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story