கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்


கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை மேற்கோள் காட்டி   மத்திய அரசு மீது ராகுல் காந்தி கடும் விமர்சனம்
x
தினத்தந்தி 4 Aug 2020 3:21 AM GMT (Updated: 4 Aug 2020 3:21 AM GMT)

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

புதுடெல்லி,

கொரோனா பெருந்தொற்று நெருக்கடியை கையாள்வதில் மத்திய அரசு திறம்பட செயல்படவில்லை என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகிறார்.

தொடர்ச்சியாக தனது டுவிட்டர் பதிவில், மத்திய அரசை இவ்விவகாரத்தில் குற்றம் சாட்டி வரும் ராகுல் காந்தி, நேற்று இரவு வெளியிட்ட டுவிட் பதிவில்,   இந்தியாவில் சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவால் பிற நாடுகளை விட இந்தியா சிறப்பான நிலையில் இருப்பதாக பிரதமர் மோடி கூறியதை சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 53 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், உலக நாடுகளில் அதிகபட்ச ஒரு நாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை இந்தியாதான் கொண்டிருப்பதாக ராகுல் காந்தி ஒரு புள்ளிவிவரத்தினை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

சரியான நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்பட்டதால் இந்தியா மற்ற நாடுகளை விட சிறந்து விளங்குகிறது என பிரதமர் மோடி கூறிய கூற்றினை மேற்கோளிட்டு ராகுல் காந்தி கொரோனா புள்ளிவிவரத்தினை பகிர்ந்துள்ளார்.

ஜூலை 28 அன்று, புதிய கொரோனா பரிசோதனை மையங்களை திறந்து வைத்த போது பிரதமர்  மேற்கண்டவாறு கூறியிருந்தார். அதுவரை நாள் முழுவதும் ஏறத்தாழ 45 ஆயிரம் புதிய கொரோனா பாதிப்புகள் என்ற அளவில்  கண்டறியப்பட்டது. ஆனால், ஜூலை 30 -முதல் இந்த எண்ணிக்கையானது 50 ஆயிரத்தினை எட்டியுள்ளது

Next Story