மும்பை கோலபா பகுதியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை


மும்பை கோலபா பகுதியில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  ஒரே நாளில் கொட்டி தீர்த்த கனமழை
x
தினத்தந்தி 6 Aug 2020 6:06 AM GMT (Updated: 6 Aug 2020 6:06 AM GMT)

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது.

மும்பை,

நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், மும்பையில் கன மழை பெய்து வருகிறது. இரண்டு நாட்களுக்கும் மேலாக பெய்த கனமழையால் பெருத்த சேதத்தினை மும்பை சந்தித்து வருகிறது.  குறிப்பாக தெற்கு மும்பையின் கோலபா பகுதியில்  ஆகஸ்ட் மாதத்தில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு  நேற்று மழை பதிவானது.

மழை மற்றும் பலத்த காற்று வீசியது. மணிக்கு 107 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசியதால் இயல்பு வாழ்க்கை முடங்கியது. அடுத்த சில மணி நேரங்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற வேண்டாம் என்று மாநில முதல் மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேட் வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து தொடங்கும் மும்பையின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கோலபா பகுதியில் ஒரே நாளில் 333.8 மி.மீட்டர் மழை பதிவானது.  இது 1974 ஆம் ஆண்டுக்கு பிறகு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நாளில் பெய்த மிக அதிக அளவு மழை பொழிவாகும்.  மும்பையில் ஆகஸ்ட் மாதத்தில் பெய்ய வேண்டிய மழையில் 64 சதவீதம், முதல் 5 நாட்களிலேயே  பெய்துள்ளது.  கனமழை காரணமாக தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.


Next Story