கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு


கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பலி எண்ணிக்கை 4 ஆக உயர்வு
x
தினத்தந்தி 7 Aug 2020 4:31 PM GMT (Updated: 7 Aug 2020 4:31 PM GMT)

கேரளாவில் ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்கும் போது இரண்டு துண்டானது பைலட் உள்பட 4 பேர் பலியானார்கள் மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன.

கோழிக்கோடு

துபாயில் இருந்து IX1344 ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் விமானம் வந்தே பாரத் திருப்பி அனுப்பும் திட்டத்தின்  ஒரு பகுதியாக இயக்கப்பட்டது. 191 பயணிகளுடன் வந்த விமானம்  கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமானத்தில் இரவு 7:40 மணியளவில் தரையிறங்க தொடங்கியது.

விமானம் 35 அடியில் இறங்கும்போது இரண்டு துண்டாக உடைந்து உள்ளது. இந்த விபத்தில் விமானிகள் ஒருவர் உட்பட நான்கு பேர் கொல்லப்பட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.இறந்த விமானி கமாண்டர் கேப்டன் தீபக் சாத்தே என அடையாளம் காணப்பட்டுள்ளார் 

விமானத்தில் இருந்த பலர் காயமடைந்து உள்ளனர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன. விமானத்தில் தீ பிடிக்கவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமானத்தில் 10 குழந்தைகள் உள்பட 174 பயணிகள்,  விமான பைலட்டுகள் 4 விமான ஊழியர்கள் இருந்தனர்.

விமான நிலையத்தில் 0483-2719493 என்ற எண்ணில் அவசர கட்டுப்பாட்டு அறை இயங்கத் தொடங்கியுள்ளது. ...


Next Story