மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 10,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி


மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 10,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
x
தினத்தந்தி 7 Aug 2020 4:49 PM GMT (Updated: 7 Aug 2020 4:49 PM GMT)

மராட்டியத்தில் இன்று ஒரேநாளில் மேலும் 10,483 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

இந்தியாவில் மராட்டியத்தில் தான் கொரோனா தொற்று கோரதாண்டவம் ஆடி வருகிறது. இங்கு தினமும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், மராட்டிய மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மாநிலம் முழுவதும் இன்று மேலும் 10,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,90,262 ஆக அதிகரித்துள்ளது.

இன்று 300 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்ததையடுத்து, மராட்டிய மாநிலத்தில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17,092 ஆக அதிகரித்துள்ளது.

இன்று மாநிலம் முழுவதும் 10,906 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 3,27,281 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 1,45,582 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மராட்டிய மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story