மராட்டியத்தில் இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு 5 லட்சத்தை தாண்டியது


மராட்டியத்தில்  இன்று ஒரே நாளில்  12,822  பேருக்கு கொரோனா: மொத்த பாதிப்பு  5 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 8 Aug 2020 4:47 PM GMT (Updated: 8 Aug 2020 4:47 PM GMT)

மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பை,

மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்த போதும் நோய் பாதித்தவர்கள் எண்ணிக்கை, பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. இந்த நிலையில், மராட்டியத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு இன்று ஒரே நாளில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

இதன் மூலம், மாநிலத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,03,084- ஆக  உயர்ந்துள்ளது.  மராட்டிய மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கூடுதலாக  275 பேர்  உயிரிழந்தவர்கள் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது.  இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 17,367- ஆக உள்ளது.  


Next Story